Headlines News :
Home » » காதலிக்கு கோடரி வெட்டு: காதலன் கையை அறுத்து தற்கொலை!

காதலிக்கு கோடரி வெட்டு: காதலன் கையை அறுத்து தற்கொலை!

Written By TamilDiscovery on Wednesday, July 31, 2013 | 11:42 PM

இந்தியாவின் டெல்லியில் காதலியை கோடரியால் வெட்டிய பின்னர் வாலிபர் ஒருவர் கைகளை அறுத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஆகாஷ்.

இவர் அதே வகுப்பில் பயின்ற ரோஷினி என்ற பெண்ணை காதலித்து வந்தார். நேற்று பல்கலைகழக வளாகத்திற்கு ஒரு கோடரியுடன் வந்த ஆகாஷ், வகுப்பிலிருந்த ரோஷினியை வெறித்தனமாக தாக்கினார்.

இதனால் பலத்த காயமடைந்த ரோஷினி இரத்த வெள்ளத்தில் வலியால் துடித்தார். உடனடியாக அவரை சப்டர்ஜங் மருத்துவமனைக்கு பிற மாணவர்கள் அழைத்து சென்றனர். காதலியை தாக்கிவிட்டு ஆகாஷ் தன்னுடைய கையை அறுத்து தற்கொலை செய்துக்கொண்டார். அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அவருடைய உயிர் பிரிந்தது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரோஷினிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template