Headlines News :
Home » » கள்ளக் காதலிக்காக கத்தியால் குத்தி உயிரை மாய்த்த நபர்!

கள்ளக் காதலிக்காக கத்தியால் குத்தி உயிரை மாய்த்த நபர்!

Written By TamilDiscovery on Thursday, September 12, 2013 | 4:37 AM

தனது கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து மார்பு பகுதியில் கத்தியால் குத்திக் கொண்ட நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டுவ - வலச்சவத்த பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் மனைவி வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று சென்றதால் அவர் மற்றுமொரு பெண்ணுடன் கள்ளக்காதல் தொடர்பு பேணிவந்துள்ளார். இருவரும் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விருவருக்கும் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து குறித்த பெண் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

பெண் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று குறித்த நபர் பெண்ணை அழைத்த போது 'என்னை மறந்துவிடு' என்று பெண் தெரிவித்துள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த நபர் கத்தியால் தனது மார்பு பகுதியில் குத்திக் கொண்டார். படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template