Headlines News :
Home » » காதலனுடன் கசந்த வாழ்க்கை: காதலியும், தம்பியும் கொடூரக் கொலை!

காதலனுடன் கசந்த வாழ்க்கை: காதலியும், தம்பியும் கொடூரக் கொலை!

Written By TamilDiscovery on Friday, September 20, 2013 | 11:07 AM

சென்னையை அடுத்த சேலையூர் அருகே மாடம்பாக்கத்தில் கல்லூரி மாணவியும் அவரது தம்பியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அந்த மாணவியின் காதலனை பொலிசார் தேடி வருகிறார்கள்.

சென்னையை அடுத்த சேலையூர் அருகேயுள்ள மாடம்பாக்கம் தேனுகாம்பாள் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். தாம்பரம் சானடோரியத்தில் உள்ள இரு சக்கர வாகன ஷோருமில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி இந்து பாலா கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கனணி பயிற்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் சாதுஷினி (வயது19) பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகன் யுகேஷ் (11) சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை வாசுதேவனும், அவரது மனைவி இந்து பாலாவும் வேலைக்கு சென்று விட்டனர். சாதுஷினி அவரது தம்பி இருவரும் கல்லூரி மற்றும் பள்ளிக்கு கிளம்பிச் சென்று விட்டனர். யுகேஷிற்கு காலாண்டு தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து விட்டார். சாதுஷினியும் மாலையில் வீட்டிற்கு வந்து மாலை 5.30 மணிக்கு தாயார் இந்து பாலாவிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு வேலை முடிந்து இந்து பாலா வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் இரத்த வெள்ளமாக இருந்தது. வீட்டின் படுக்கை அறையில் நைட்டி கிழிந்த நிலையில் தலை முடி அறுக்கப்பட்டு கழுத்து, நெற்றி, தலை பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் சாதுஷினி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

வீட்டின் ஹாலில் தலையில் சிலிண்டரால் அடிக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் யுகேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தான்.

இதை பார்த்த இந்து பாலா அலறினார். உடனே அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் தலைமையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை தொடர்பாக வாசுதேவன் குடும்பத்தினரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

சாதுஷினி, மேடவாக்கம் ரங்கராஜன் நகரைச் சேர்ந்த முகேஷ் என்ற வாலிபரை காதலித்து கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு பின்னர் சாதுஷினி காதலனை விட்டு வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முகேஷ் அடிக்கடி வீட்டிற்கு வந்து சாதுஷினியை தன்னுடன் வருமாறு மிரட்டி வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த சாதுஷினியை கொலை செய்யும் திட்டத்தோடு முகேஷ் வந்து அவரை கொன்று இருக்கலாம் என்றும், அதை சிறுவன் யுகேஷ் பார்த்ததால் அவனையும் தீர்த்துக் கட்டி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தனிப்படை பொலிசார் முகேஷை தேடி வருகின்றனர். முகேஷ் பிடிபட்டால் தான் கொலை பற்றிய விவரங்கள் தெரியவரும் என பொலிசார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template