Headlines News :
Home » » கண்டி ஐதேக கட்சி அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு!

கண்டி ஐதேக கட்சி அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு!

Written By TamilDiscovery on Monday, September 9, 2013 | 7:55 PM

கண்டி மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் லலித் ரணராஜவுக்கு சொந்தமாக யடிவாவல பிரதேசத்திலுள்ள கட்சி அலுவலகத்தின் மீது நேற்று (09) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கெப் வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்திச் சென்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சத்தத்தை கேட்டு அலுவலகத்தில் இருந்தவர்கள் அலறியடித்துச் சென்றுள்ளதாக கபே குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மாத்தளை யட்டவக்க பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை மத்திய மாகாணத்தில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு தேர்தல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கபே இயக்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template