Headlines News :
Home » » நிலாவில் மழை : மீண்டும் கே.ஆர்.விஜயா!

நிலாவில் மழை : மீண்டும் கே.ஆர்.விஜயா!

Written By TamilDiscovery on Tuesday, July 23, 2013 | 10:41 PM

ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டவர் கே.ஆர்.விஜயா. பழம்பெரும் நடிகையான இவர் தமிழ் திரையுலகில் 1960–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கே.ஆர்.விஜயா. அதன் பிறகு குணசித்திர வேடங்களில் நடித்தார்.

கடைசியாக தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நடித்தார். உடல் நிலையை கருதில் கொண்டு நடிப்பதில் இருந்து விலகி இருந்த கே.ஆர்.விஜயா. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 'நிலாவில் மழை' என்ற படத்தில் தற்போது நடிக்கிறார். முதலில் மறுத்த அவர் கதை கேட்ட பிறகு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்த படத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்வதை இலட்சியமாக கொண்ட வைத்தியர் வேடத்தில் வருகிறார்.

குறைந்த வருவாய் கிடைத்தாலும் போதும் என்று வைத்திய தொழில் செய்யும் கே.ஆர். விஜயாவுக்கு உயிருக்கு போராடும் வாலிபரை காப்பாற்ற வேண்டிய கட்டாய பொறுப்பு வந்து சேர்கிறது. அந்த இளைஞரை நோயில் இருந்து மீட்கும் போராட்டத்தில் வென்றாரா என்பது கிளைமாக்ஸ்.

எஸ்.பி.ஆர்.பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரவிஷங்கள் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.சுகுமார் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ஆர் இயக்குகிறார்.  எஸ்.பி.ஆர்.பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பாண்டு முக்கிய வேடத்தில் வருகிறார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template