Headlines News :
Home » » பெண்கள் எவ்வாறு மோட்டார் சைக்கிளில் அமர வேண்டும்? அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

பெண்கள் எவ்வாறு மோட்டார் சைக்கிளில் அமர வேண்டும்? அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

Written By TamilDiscovery on Tuesday, July 23, 2013 | 11:49 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும் எனும் போக்குவரத்துச் சட்டம் தற்போது அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களில் பின் ஆசனங்களில் இருந்து செல்லும் பெண்கள் ஒரு பக்கம் இருந்தே பயணித்து வருகின்றனர்.

தற்போது மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்தும் செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும். இது போக்குவரத்து சட்ட ஒழுங்காகும்.

இந்த போக்குவரத்து சட்ட ஒழுங்கை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் பெண்கள் மற்றும் சாரி போன்ற உடை அணிந்து செல்லும் பெண்கள் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிப்பதற்கு சிரமப்படுவது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template