Headlines News :
Home » » சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.

சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.

Written By TamilDiscovery on Sunday, October 27, 2013 | 10:17 PM

சிறுவன் ஒருவரை கடுமையான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பௌத்த பிக்குவை கைது செய்வதற்கான நடவடிக்கையை மாரவில பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நாத்தாண்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி பயிலும் 13 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பிக்கு, சிறுவன் கல்வி கற்கும் பாடசாலையில் கல்வி கற்பித்து வருபவர் என தெரியவந்துள்ளது.

நடனம் மற்றும் சங்கீத போட்டி பயிற்சிக்கு சென்றவேளை சந்தேகநபர், மாணவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி வரையில் சிறுவன் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இதுவரையில் கைது செய்யப்படா நிலையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template