Headlines News :
Home » » வீதி விபத்தில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர் பலி!

வீதி விபத்தில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர் பலி!

Written By TamilDiscovery on Wednesday, August 7, 2013 | 2:41 AM

புத்தளம் பொலிஸ் பிரிவில் மதுரங்குளி பகுதியில் இன்று (07) அதிகாலை 5.20 அளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பனாகொட இராணுவ முகாமில் பணிபுரியும் அங்கவீனமுற்ற இராணுவ வீரரான 42 வயதுடைய சாந்தகுமார என்பவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து காருடன் சாரதி தப்பிச் சென்றவேளை புத்தளம் போக்குவரத்து பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template