Headlines News :
Home » » ஈராக்கில் தொடர் குண்டு தாக்குதல்: 41 பேர் பலி, 100க்கும் அதிகமானோர் காயம்!

ஈராக்கில் தொடர் குண்டு தாக்குதல்: 41 பேர் பலி, 100க்கும் அதிகமானோர் காயம்!

Written By TamilDiscovery on Wednesday, August 7, 2013 | 8:37 PM

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று முன்தினம் 6 இடங்களில் தொடர்ந்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

சந்தைககள் மற்றும் கடை வீதிகளில் இத்தாக்குதல்கள் நடந்தன. பாக்தாத்தின் வட மேற்கில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 10 பேர் பலியாகினர். வர்த்தக நகரமான கார்ரடாவில் 5 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர். இது போன்று புறநகர் பகுதியான நாகர்வான் அன்பாகியா ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இது போன்று மேலும் பல இடங்களில் நடந்த கார் குண்டு தாக்குதல்களில் மொத்தம் 41 பேர் பலியாகினர். 100 பேர் காயம் அடைந்தனர்.

அத்தாக்குதலுக்கு ஈராக் பிரதமர் நூரி அல்–மலிகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template