Headlines News :
Home » » பருத்தித்துறை சுரங்கப்பாதை புலிகள் பாவித்தனரா? தோண்டும் பணியில் இராணுவம்!

பருத்தித்துறை சுரங்கப்பாதை புலிகள் பாவித்தனரா? தோண்டும் பணியில் இராணுவம்!

Written By TamilDiscovery on Sunday, August 4, 2013 | 3:30 AM

யாழ்-பருத்தித்துறையில் நகரையும் துறைமுகப் பகுதியையும் இணைக்கும் பாரிய சுரங்கப் பாதையொன்று கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

பருத்தித்துறை நகரின் மத்தியில் பஸ் நிலையத்தில் வீதி திருத்தப் பணிகள் ஈடுபட்டிருந்த புல்டோசர் வாகனம் வீதியிலுள்ள பாரிய குழியொன்றில் திடீரென்று இறங்கியது. இதன் பின்னர் அந்த குழி நீண்டு கொண்டு சென்றதால் அச்சமடைந்த வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தினர் இதனை இராணுவத்தினருக்கு அறிவித்தனர்.

இது துறைமுகத்தை நோக்கி செல்லும் சுரங்கப்பாதை தானா? என இராணுவத்தினர் ஆய்வுகளை செய்தனர்.

இந்நிலையில் இன்று அப்பகுதியை இராணுவத்தினர் சீனப் பணியாளர்களின் உதவியுடன் தோண்டி அது ஊடகங்களில் வெளியாகியது போன்று விடுதலைப் புலிகள் பாவித்த சுரங்க வழிப் பாதைதானா என கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template