Headlines News :
Home » » எனக்கு என் காதலன் தான் வேண்டும் அடம்பிக்கும் சேரனின் மகள்!

எனக்கு என் காதலன் தான் வேண்டும் அடம்பிக்கும் சேரனின் மகள்!

Written By TamilDiscovery on Sunday, August 4, 2013 | 12:21 AM

சேரனின் மகள் தனக்கு பெற்றோர் வேண்டாம், காதலன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.

இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி(20) சந்துரு என்பவரை காதலிக்கிறார். சந்துரு நல்லவர் இல்லை. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அதனால் தான் அவர்களின் காதலை எதிர்க்கிறேன் என்று நேற்று சேரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தெரிவித்தார். அப்போது அவர் கண்ணீர் சிந்தினார்.

இதையடுத்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து மகளிர் போலீசார் தாமினிக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் தாமினியோ யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. எனக்கு என் காதலன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். நேற்று பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அவருக்கு உதவி கமிஷனர் ஷியாமளாதேவி அறிவுரை வழங்கியுள்ளார். முதலில் படித்து முடி. உன் காதலை நாங்கள் எதிர்க்கவில்லை. அதற்குள் உன் காதலனும் நல்ல வேலையில் சேரட்டும். அதுவரை பொறுமையாக இரு என்று தாமினியிடம் போலீசார் தெரிவித்தனர்.

அதற்கு தாமினி கூறுகையில், கூழோ, கஞ்சியோ குடித்து வாழ்வேன். ஆனால் சந்துருவை மட்டும் பிரிந்திருக்க என்னால் முடியாது என்றார். தாமினியிடம் மணிக்கணக்கில் பேசியும் பலனில்லை. அவரோ தன் காதலன் மட்டுமே வேண்டும் என்றும், இனியும் பெற்றோருடன் சேர்ந்து இருக்க முடியாது என்றும் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தாமினியை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் நேற்று நள்ளிரவில் சேர்த்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படவிருக்கிறது. அப்போது தாமினிக்கு மீண்டும் கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template