Headlines News :
Home » » யாழ். பருத்தித்துறை நகரத்தில் சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு.

யாழ். பருத்தித்துறை நகரத்தில் சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு.

Written By TamilDiscovery on Sunday, July 28, 2013 | 11:07 AM

யாழ். பருத்தித்துறை நகரத்தில் சுரங்கப் பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்கரைக்குச் செல்லும் வீதியிலேயே இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணியின் போது இந்த சுரங்கப் பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்குரிய பாதையாக இது காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த சுரங்கப்பாதை எந்தக் காலத்திற்குரியது, யார் இதனைப் பயனப்படுத்தினார்கள் என்ற தகவல்கள் இதுவரை இல்லாத போதும் இதனை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template