Headlines News :
Home » » புலிக்கொடியுடன் ஓடியவருக்கு திறந்த பிடியாணை: சிவப்பு அறிவிப்பு!

புலிக்கொடியுடன் ஓடியவருக்கு திறந்த பிடியாணை: சிவப்பு அறிவிப்பு!

Written By TamilDiscovery on Tuesday, July 30, 2013 | 11:12 PM

பிரித்தானியாவின் கார்டிப் மைதானத்தில் இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2000ம் ஆண்டு மார்ச் மாதம் 08ம் திகதி பெற்றுக்கொண்ட யசோதரன் சடாச்சரமூர்த்தி எனும் பெயரிலான கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

அவருக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கை ஓகஸ்ட் 13ம் திகதிவரை நீதவான் ஒத்திவைத்தார். சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20ம் திகதி பிரித்தானிய கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடி குழப்பம் வளைவித்த  நபரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை கடந்த 3ம் திகதி பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகை தந்தால் கைது செய்யுமாறு கடந்த 15ம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பும் விடுத்துள்ளார். கிரிக்கெட் மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரன் மணிமாறன் என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template