Headlines News :
Home » » மகளின் தோழியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய 60 வயது நபர் கைது!

மகளின் தோழியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய 60 வயது நபர் கைது!

Written By TamilDiscovery on Wednesday, July 24, 2013 | 4:38 AM

இந்தியாவில் தனது மகளை சந்திக்க வந்த அவளது பாடசாலைத் தோழியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம், குர்கான் 31வது செக்டர் பகுதியில் வசிக்கும் 9 வயது மாணவி தனது பாடசாலை தோழியை சந்திக்க கடந்த திங்கட்கிழமை அவளது வீடு தேடி சென்றுள்ளார்.

அப்போது, வீட்டில் அந்த மாணவியின் தந்தை மட்டும் தனியே இருந்தார்.

உன் தோழி கடைக்கு போய் இருக்கிறாள். அவள் வரும் வரை உள்ளே வந்து உட்கார் என்று கூறிய அவர் சிறுமி உள்ளே நுழைந்ததும் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு அவளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். அவரது பிடியில் இருந்து விடுபட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்ற சிறுமி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதாள்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் அவள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதால் குற்றம் சாட்டப்பட்ட செடிலால் (60) என்பவரை பொலிசார் கைது செய்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template