Headlines News :
Home » » மரபு வைத்திய நிலைய திட்டம் தோல்வி - வேடுவத் தலைவர் ஊருவரிகே!

மரபு வைத்திய நிலைய திட்டம் தோல்வி - வேடுவத் தலைவர் ஊருவரிகே!

Written By TamilDiscovery on Wednesday, July 24, 2013 | 4:27 AM

தனது வீட்டுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட மரபு வைத்திய நிலையம் ஒரு தோல்வியுற்ற திட்டம் என இலங்கை வேடுவத் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.

சுதேச வைத்திய மற்றும் கலாசார அமைச்சினால் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த மரபு வைத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளால் பெறப்படும் மருந்துகள் நிலையத்தில் சேகரிக்கப்பட்டு ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு கொண்டுசெல்லவென மரபு வைத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆதிவாசிகளால் சேகரிக்கப்பட்ட அரளி, வெற்றிலை, நெல்லி, வெனிவேல் உள்ளிட்ட மருந்து வகைகள் குவிக்கப்பட்டு பழுதடையும் நிலையில் காணப்படுவதாக வேடுவத் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template