Headlines News :
Home » » அசாரம் பாபு சிறுமிகளுடன் உறவு: அம்பலமாகும் லீலைகள்.

அசாரம் பாபு சிறுமிகளுடன் உறவு: அம்பலமாகும் லீலைகள்.

Written By TamilDiscovery on Friday, October 18, 2013 | 4:41 AM

ஆன்மீகப் போர்வையில் வளைய வந்த அசாரம் பாபு பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார், அவரது அகமதாபாத் ஆசிரமத்தில் பணியாற்றிய முன்னாள் சேவகர் ஒருவர்.

13 வயது முதல் 16 வயதுடைய இளம் பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் அது தன் ஆயுளையும், காமசக்தியையும் கூட்டும் என அசாரம் பாபு நம்பினாராம்.

இது குறித்து ஹிந்தித் தொலைக்காட்சி ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியில் அவர் தனது பெயரை தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆசிரமத்திலேயே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அசாரம் பாபு என்கிறார் இவர்.

தான் இதனை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் காரணம், அவர் ஆசிரமத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏகப்பட்ட உளவாளிகளை வைத்திருந்தார் எனவே யார் அவருக்கு எதிராக செயல்பட்டாலும் அவரை உடனடியாக தாக்குவதுதான் பாபுவின் ஸ்டைல் என்கிறார்.

தினமும் இரவு காமசூத்ராவை படிப்பாராம்! மேலும் பவ பிரகாஷ் ஆயுர்வேத என்ற ஒரு வடமொழி நூலின் மொழிபெயர்ப்பை அவர் படிப்பார் என்கிறார் இவர்.

அதில் 2வது ஸ்லோகத்தில் 13 முதல் 16 வயதுடைய பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளதாம் அதை பாபு தினமும் படிப்பார் என்று கூறுகிறார் அந்த பெயர் கூற விரும்பாத முன்னாள் பக்தர்.

பரிசோதனைக்கு மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் அசாரம் பாபு!
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template