Headlines News :
Home » » திருமண விருந்தில் அவமதிப்பு: அவமானம் தாங்காது தாயும் மகளும் தற்கொலை!

திருமண விருந்தில் அவமதிப்பு: அவமானம் தாங்காது தாயும் மகளும் தற்கொலை!

Written By TamilDiscovery on Tuesday, September 10, 2013 | 3:35 AM

திருமண விருந்து உபசரிப்பில் அலட்சியம் காட்டியதால் மனமுடைந்த பெண், மகளுடன் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மல்லிகா, 48. இவர்களது உறவினர் காளியப்பன் என்பவரது திருமணம் நேற்று காலை, சாத்தனூர் அடுத்த, தேசூர்பாளையம் கிராமத்தில் நடந்தது.

திருமணத்தில் கலந்து கொள்ள, உறவினர்களுடன், மல்லிகா குடும்பத்தினரும் அங்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு விருந்து நடந்தபோது, தகராறு ஏற்பட்டது. மல்லிகாவையும், அவரது உறவினர்களையும், முறையாக உபசரிக்காமல், திருமண வீட்டார் அலட்சியப்படுத்தி உள்ளனர்.

வேதனையடைந்த மல்லிகா, அவரது மகள் வள்ளி, 25, மல்லிகாவின் தம்பி ராஜமாணிக்கம், 40 ஆகியோர், ஊருக்கு புறப்பட்டனர். திருமணத்துக்கு வந்தவர்கள் தடுத்தும், மல்லிகா தரப்பினர் கேட்காமல் சென்று விட்டனர்.

தேசூர் பாளையத்தில் உள்ள, ஒருவரது விவசாய நிலத்தில், மல்லிகா உட்பட, 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். மூவரையும் மீட்டு, திருவண்ணாமலை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பினர்.

வழியில், வள்ளி இறந்தார். வைத்தியசாலையில், முதல் உதவி சிகிச்சை பெற்ற பின், புதுச்சேரி வைத்தியசாலைக்கு மல்லிகாவை கொண்டு சென்றபோது, அவரும் இறந்தார்.

ராஜமாணிக்கம், புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சாத்தனூர் பொலிசார் விசாரிக்கின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template