அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக ஈரானும் விண்வெளியில் ஆய்வு நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. வருகிற 2018–ம் ஆண்டில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.
இதற்காக தற்போது விலங்குகளை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்தி வருகிறது. கடந்த 2010–ம் ஆண்டில் எலி மற்றும் ஆமையை அனுப்பியது.
இந்த நிலையில், சமீபத்தில் ‘பிஸ்காம்’ என்ற குரங்கை விண்வெளிக்கு அனுப்பினர். 2 நிமிட நேரம் பயணம் 120 கி.மீட்டர் தூரம் பயணம் செய்த அந்த குரங்கு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.
தற்பேது அடுத்த கட்டமாக வருகிற மார்ச் மாதம் விண்வெளிக்கு ‘பெர்சியன்’ இன பூனையை அனுப்ப ஈரான் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பூனை நீண்ட அடர்ந்த ரோமங்களுடன் அகலமான முகம் கொண்டதாக இருக்கும்.
பூனையை தவிர எலி மற்றும் முயலை அனுப்பும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இந்த தகவலை ஈரான் விண்வெளி திட்ட சீனியர் அதிகாரி முகமது இப்ராகிம் தெரவித்துள்ளார்.
பூனையை விண்வெளி ஆய்வுக்கு அனுப்பும் ஈரான்.
Written By TamilDiscovery on Tuesday, September 17, 2013 | 9:13 PM
Related articles
- கதிர்வீச்சு கலந்த நீர் சமுத்திரத்தை சென்றடைந்திருக்கலாம் - டோக்கியோ மின்சக்தி நிறுவனம்!
- வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றம்!
- நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா!
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்!
- இந்தியப் பிரதமர் மன்மோகனிடம் தோற்ற அமெரிக்க.
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !