Headlines News :
Home » » காதலி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விமானப்படை வீரர் பலி!

காதலி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விமானப்படை வீரர் பலி!

Written By TamilDiscovery on Wednesday, August 21, 2013 | 6:25 AM

திருகோணமலை மாபில்பீச் பகுதியில் உள்ள படையினர் விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த விமானப்படை கொப்ரால் இன்று (21) பகல் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் என்டி விஜேசூரிய தெரிவித்தார். காலி - கரந்தெனியவைச் சேர்ந்த 30 வயதான மதுரகுமார பிரியதர்ஷன என்ற விமானப்படை கொப்ராலே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தான் காதலித்த விமானப்படை வீராங்கனை இன்னுமொரு விமானப்படை வீரருடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த விமானப்படை கொப்ரால் வீராங்கனை மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி தானும் சுட்டுக் கொண்டார்.

அதில் குறித்த வீராங்கனையும் அவருக்கு அருகில் நின்ற மற்றுமொரு விமானப்படை வீரரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template