Headlines News :
Home » » ஆபாச சைகை காட்டினார்? பெண் வன்கொடுமை சட்டத்தில் பிரபல இசையமைப்பாளர் கைது!

ஆபாச சைகை காட்டினார்? பெண் வன்கொடுமை சட்டத்தில் பிரபல இசையமைப்பாளர் கைது!

Written By TamilDiscovery on Sunday, August 4, 2013 | 9:36 PM

பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியதாக, பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை நேற்று பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாலவாக்கம் ´வி.ஜி.பி லே அவுட்´ பகுதியில் வசித்து வருகிறார். அதே தெருவில் வசித்து வருபவர் ராதா வேணுபிரசாத், 60. சில ஆண்டுகளுக்கு முன் ஜேம்ஸ் வசந்தன் தன் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக, அவர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், ராதா வேணுபிரசாத், சில தினங்களுக்கு முன், நீலாங்கரை காவல் நிலையத்தில் ஜேம்ஸ் வசந்தன் மீது புகார் அளித்தார்.

அதில், "சில தினங்களுக்கு முன், என் வீட்டருகே நான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியே காரில் வந்த ஜேம்ஸ் வசந்தன், என்னை பார்த்து ஆபாச சைகை காட்டினார். தொடர்ந்து ஆபாச வார்தைகளால் திட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்´ என, புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து, நேற்று பிற்பகல், 3:00 மணிக்கு, நீலாங்கரை பொலிஸார் ஜேம்ஸ் வசந்தனை அவரது வீட்டில் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்தனர்.

அப்போது ஜேம்ஸ் வசந்தன் கூறுகையில், "புகார் அளித்த பெண், பொலிஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு தெரிந்தவர் என்பதால், என்னை பொய்யான வழக்கில் கைது செய்துள்ளனர். என்னையும் என் மனைவி உள்ளிட்ட குடும்பத்தாரையும் பொலிஸார் ஆபாசமாக திட்டினர். இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை பற்றி எந்த விசாரணையும் செய்யப்படவில்லை," என்றார்.

பின், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template