Headlines News :
Home » » அப்பிள் போன்களை எதிர்பார்த்த பெண்ணுக்கு அப்பிள் பழங்களால் ஆப்படித்த பெண்!

அப்பிள் போன்களை எதிர்பார்த்த பெண்ணுக்கு அப்பிள் பழங்களால் ஆப்படித்த பெண்!

Written By TamilDiscovery on Monday, August 5, 2013 | 5:11 AM

நவீன ரக ஆப்பிள் போன்கள் என்று நினைத்து ஆப்பிள் பழங்களை வாங்கி இளம்பெண் ஒருவர் ஏமாந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் 21 வயது இளம்பெண் தனக்கு 2 ஆப்பிள் ரக நவீன கைபேசிகள் தேவை என இணையம் மூலம் விளம்பரம் செய்தார். சில நாட்களில் அவரை இணையத்தில் தொடர்பு கொண்ட மற்றொரு பெண் தன்னிடம் புத்தம் புதிதாக ´2 ஆப்பிள்கள்´ இருப்பதாகவும் குறைந்த விலைக்கு விற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஒரு நாளில் இருவரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். விளம்பரம் செய்த பெண்ணிடம் 1,200 அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொண்டு 2 புதிய கைபேசி பெட்டிகளை அளித்தார். மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்த அந்த இளம்பெண் பெட்டிகளை திறந்து பார்த்தபோது ஒவ்வொரு பெட்டியிலும் செக்கச்சிவந்த 2 ஆப்பிள் பழங்கள் இருப்பதை கண்டு திகைப்படைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பிரிஸ்பேன் பொலிசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இணையத்தில் பொருட்களை வாங்குபவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று குற்ற தடுப்பு காவலர் ஜெஸ் ஹாப்கின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template