Headlines News :
Home » » யாழில், நான்கு சிறுமிகளை துஷ்பிரயோகம்: மூவர் கைது!

யாழில், நான்கு சிறுமிகளை துஷ்பிரயோகம்: மூவர் கைது!

Written By TamilDiscovery on Saturday, July 27, 2013 | 10:51 AM

யாழ். குடாநாட்டில் மூன்று வெவ்வேறு பிரதேசங்களில் நான்கு சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த மூவரைப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர் என காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஈ.எம்.எம். ஏக்கநாயக்க தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

யாழ்ப்பாணத்தில் மூன்று பிரதேசங்களில் நான்கு சிறு­மிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளனர் கோப்பாய், உரும்பிராய் கிழக்குப் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவர் மீது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செயது யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். யாழ். நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அச்சுவேலிப் பகுதியில் 8 வயதுடைய சிறுமியொருவரை 19 வயது இளைஞன் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்தார். எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அதேவேளை, காங்கேசன்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 13 வயதையும் 14 வயதையும் உடைய இரண்டு சிறுமிகள் யாழ்ப்பாண கந்தர்மடத்தை சேர்ந்த 36 வயதுடைய ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்தார் என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர் என்றார்.

தொடர்புடைய செய்தி
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template