இளவரசன் இறப்பதற்கு முன்பு அவரது பெற்றோருக்கும், காதல் மனைவி திவ்யாவுக்கும் எழுதிய 4 பக்க கடிதம் சிக்கியது. அதில் தன்னுடைய சாவுக்கு நானே காரணம் என்றும், வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு இளவரசன் எழுதிய கடிதம் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் முன்னிலையில் தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் மற்றும் அரூர் துணை பொலிஸ் சூப்பிரண்டு சம்பத் ஆகியோர் இளவரசனின் பெற்றோர் இளங்கோ-கிருஷ்ணவேணி, உறவினர்கள் ஜோசப், அறிவழகன், நத்தம் காலனியைச் சேர்ந்த ஊர் பெரியவர் சின்னத்தம்பி, இளவரசனின் அக்காள் திலகவதி. அவரது கணவர் சரவணன் ஆகிய 7 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த கடிதத்தை இளவரசன் எழுதினானா? என்பது சந்தேகமாக இருக்கிறது என்று அவரது தந்தை இளங்கோ கூறினார். இதை கண்டறிய சென்னையில் உள்ள தடயவியல் துறைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
ஏற்கனவே இளவரசன் நோட்டுகளில் எழுதி இருந்த கையெழுத்தும், கடிதத்தில் உள்ள இளவரசன் எழுதிய வாசகங்களும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
தடயவியல்துறை நிபுணர்கள் ஆய்வு செய்து கடிதம் எழுதியது இளவரசன்தான் என்பதை உறுதி செய்தனர்.
இறப்பதற்கு முன்பு திவ்யாவுக்கு கடிதம் எழுதியது இளவரசன்தான்: தடயவியல் துறை உறுதி!
Written By TamilDiscovery on Sunday, July 14, 2013 | 6:33 AM
Related articles
- நள்ளிரவில் தனியாக வெளியே வந்த ராகுல்: மர்மப் பெண்ணுடன் உரையாடல்!
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
- இரயிலில் சில்மிஷம்: பெண்கள் கதறியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
- அசிட் பருக்கி கொலை முயற்சி: 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !