Headlines News :
Home » » லேசர் ஒளியின் அதிர்வுகளை பயன்படுத்தி மிக துல்லியமாக நேரத்தை கணக்கிடும் கடிகாரம் கண்டுபிடிப்பு!

லேசர் ஒளியின் அதிர்வுகளை பயன்படுத்தி மிக துல்லியமாக நேரத்தை கணக்கிடும் கடிகாரம் கண்டுபிடிப்பு!

Written By TamilDiscovery on Wednesday, July 10, 2013 | 8:28 AM

நேரத்தை அளவிட மிக துல்லியமான முறையை கண்டுபிடித்துள்ளதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1960ம் ஆண்டு முதல் அணுக்கடிகாரங்கள், அணுவில் ஒழுங்காக ஏற்படும் அதிர்வுகள் மூலம் செக்கன்கள் அளவிடப்படுகின்றன.

ஆனால் லேசர் ஒளியில் ஏற்படும் வேகமான அதிர்வுகளைக் கொண்டு மேலும் துல்லியமாக செக்கன்களை அளவிடும் ஒரு புதிய வகை அணுக்கடிகாரத்தை உருவாக்கி இருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்டிகல் லட்டைஸ் கடிகாரங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கடிகாரங்கள், 30 கோடி ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் ஒரு செக்கனை குறைவாக மதிப்பிடுமாம்.

மிக, மிக துல்லியமாக நேரத்தை கணிப்பிடுவது என்பது தொலைத்தொடர்பு, செய்மதி வழிகாட்டி மற்றும் பங்குச் சந்தை செயற்பாடுகள் போன்ற தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமாகும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template