ஜார்க்கண்டில் 4 பழங்குடியின சிறுமிகளை கடத்தி துப்பாக்கி முனையில் கற்பழித்த 20 பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டம் லிதிபாராவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 4 பழங்குடியின சிறுமிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு துப்பாக்கியுடன் வந்த 20 பேரால் கடத்தப்பட்டனர். அந்த 20 பேர் விடுதியில் தங்கியிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பிற மாணவிகளை அறைக்குள் பூட்டிவிட்டு 4 சிறுமிகளை மட்டும் கடத்தினர். பின்னர் அவர்கள் துப்பாக்கி முனையில் அந்த சிறுமிகளை விடுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் வைத்து கற்பழித்தனர்.
சுமார் 2 மணிநேரம் கழித்து அவர்கள் சிறுமிகளை மீண்டும் விடுதியில் வந்து விட்டுவிட்டுச் சென்றனர். இது குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. கற்பழிக்கப்பட்ட சிறுமிகள் 12 முதல் 14 வயது வரை உள்ளவர்கள். மருத்துவ பரிசோதனையில் அவர்கள் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் பஹாரியா என்ற பழங்குடியனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
சிறுமிகள் கற்பழிப்பு தொடர்பில் 8 பேர் கைது!
Written By TamilDiscovery on Tuesday, July 16, 2013 | 10:11 AM
Related articles
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
- சாதுவின் கனவில் மன்னர்: 1,000 டன் தங்கப் புதையலை!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
- நள்ளிரவில் தனியாக வெளியே வந்த ராகுல்: மர்மப் பெண்ணுடன் உரையாடல்!
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !