அமெரிக்காவில் செயற்கை மூச்சுக்குழல் பொருத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கொரியா மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த ஹன்னா வாரன் என்ற குழந்தை மூச்சுக் குழாய் இல்லாமலே பிறந்தது.
இந்த குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் 99 சதவிகிதம் இறந்து விடுகின்றன. ஆனால் ஹன்னாவுக்கு வாயையும், நுரையீரலையும் இணைக்கும் வகையில் குழாய் வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து வைத்திருந்ததால் அவள் உயிர் பிரியாமல் இருந்தது. இந்நிலையில், ஹன்னாவுக்கு ஆய்வுக் கூடத்தில் செயற்கையாக மூச்சுக்குழாயை தயாரித்து பொரு த்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஹன்னாவின் எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களையும், பிளாஸ்டிக் பைபரால் செய்யப்பட்ட குழாயையும் பயன்படுத்தி ஆய்வகத்தில் செயற்கையாக மூச்சுக்குழாயை உண்டாக்கி அதை அறுவை சிகிச்சை மூலம் இணைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து செயற்கையாக மூச்சுக்குழலை தயாரித்த மருத்துவர்கள், கடந்த ஏப்ரல் மாதம் 9ம் திகதி அறுவைசிகிச்சை மேற்கொண்டனர். இதனை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் அமைந்துள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் டாக்டர் பாலோ மக்கியாரினி மேற்கொண்டார்.
இவர் ஏற்கனவே இதுபோன்ற 6 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு அனுபவம் பெற்றவர்.
அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்கு தானாகவே சுவாசித்து வந்த ஹன்னாவுக்கு, படிப்படியாக நுரையீரல் பாதிப்படைய உயிரிழந்தாள்.
செயற்கை மூச்சுக்குழல் பொருத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது!
Written By TamilDiscovery on Wednesday, July 10, 2013 | 10:30 AM
Related articles
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
- பொருளாதாரம் முடங்கும் நிலை: ஒபாமா எச்சரிக்கை!
- கதிர்வீச்சு கலந்த நீர் சமுத்திரத்தை சென்றடைந்திருக்கலாம் - டோக்கியோ மின்சக்தி நிறுவனம்!
- வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றம்!
- நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !