இனி குற்றச் செயல்களில் ஈடுபடப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் அரசியல்துறைத் தலைவி சிவகாமி எனப்படும் தமிழினி தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட மாட்டேன். எதிர்காலத்தில் திருமண பந்தத்தில் இணைந்து நல்ல வாழ்க்கை ஒன்றைத் தொடர்வேன்.
கடந்த கால நினைவுகளை நான் அழித்துவிட்டேன்.
எனது தங்கையின் பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்வேன். தேவையில்லாதவற்றை தலையில் போட்டுக்கொள்ள மாட்டேன். எதிர்காலத்தில் நல்ல குடும்ப வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து சமூகத்திற்கு தொண்டாற்றுவேன். கடந்த ஓரு ஆண்டில் தியானம் செய்தேன். தற்போது நான் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றேன். இராணுவத்தினர் சிறந்த முறையில் புனர்வாழ்வு அளித்தனர். இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என தமிழினி தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட போது தமிழினி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
திருமண பந்தத்தில் இணைந்து நல்ல வாழ்க்கை ஒன்றைத் தொடர்வேன்: தமிழினி!
Written By TamilDiscovery on Thursday, June 27, 2013 | 11:13 PM
Related articles
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !