Headlines News :
Home » » 17 வயது மாணவி கற்பழிப்பு, போனில் படம் எடுத்து மிரட்டல்: மலையில் மறைந்திருந்த பள்ளி ஆசிரியர் கைது!

17 வயது மாணவி கற்பழிப்பு, போனில் படம் எடுத்து மிரட்டல்: மலையில் மறைந்திருந்த பள்ளி ஆசிரியர் கைது!

Written By TamilDiscovery on Sunday, June 30, 2013 | 11:32 AM

ஆசிரியர் ஒருவரினால் பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டதையடுத்து, ஆசிரியர் மற்றும் மொபைல் போனில் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த அவரது நண்பர்கள் உள்ளிட்ட 5-பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பாகர் உசேன் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் 25-வயதான சரண்ராஜ் என்பவருக்கு அதே ஊரைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவி மீது ஆசை ஏற்பட்டதினால் அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து பேசி, அவரை காதலிக்க தொடங்கினார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாணவியை ஆசிரியர் அங்குள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு, மாணவியை மிரட்டி கற்பழித்தார். இவர் மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை அவரது நண்பர்களான விமல் (25), ரூபன் (24) ஆகியோர் மொபைல் போனில் படம் எடுத்து "நடந்ததை வெளியே சொன்னால், படத்தை உலகம் முழுவதும் மொபைலில் அனுப்பி விடுவோம்" என மாணவியை மிரட்டி அனுப்பினர்.

மாணவியிடம் மொபைலில் படம் எடுத்ததை காட்டி விமல், ரூபன் இருவரும் அடிக்கடி பணம் கேட்டுள்ளனர். மாணவியும் வேறு வழியின்றி நகைகளை விற்று வீட்டுக்குத் தெரியாமல் பணத்தை கொடுத்துள்ளார். திடீரென, விமல் ரூபன் இருவரிடமும்  பண நடமாட்டம் அதிகமாகி உள்ளமை குறித்து அவர்களது நண்பர்கள் கேட்டதற்கு மிரட்டல் நாடகத்தை அவர்களிடம் கூறினர். இதை கொண்டு, லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க அவர்களும் திட்டமிட்டனர். அதே போல தாங்களும் மிரட்டல் விடுத்து பணம் சம்பாதிக்கப் போவதாக கூறவே, விமல் மற்றும் ரூபன் மொபைலில் உள்ள படத்தை அவர்களுக்கும் அனுப்பினர்.

உடனே இவர்கள் மாணவியின் அண்ணனிடம் மொபைலில் இருந்த கற்பழிப்பு படத்தை காட்டி, 50 ஆயிரம் ரூபாய் கேட்டனர்.

அப்போது தான் மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம் அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தது. அந்த கும்பல் விடுவதாக இல்லை வீட்டுக்கே வந்து பணம் கேட்டு மிரட்டி சென்றனர். இதனையடுத்து மாணவியின் குடும்பத்தினர் குடியாத்தம் டி.எஸ்.பி.,யிடம் புகார் செய்ததுடன் குடியாத்தம் மகளிர் போலீசார் விமல், ரூபன், விஜயகுமார் என்போரை கைது செய்தனர். அவர்கள் மூவரும் கொடுத்த தகவலில் படி, பேர்ணாம்பட்டு மலையில் மறைந்திருந்த சரண்ராஜ், அமர்நாத்தையும், நேற்று மாலை கைது செய்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனை செய்ய குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template