Headlines News :
Home » » சில்மிஷத்தின் விளைவு, இணைஞர் குத்திக் கொலை: மாணவி கைது!

சில்மிஷத்தின் விளைவு, இணைஞர் குத்திக் கொலை: மாணவி கைது!

Written By TamilDiscovery on Sunday, October 6, 2013 | 11:59 PM

மகாராஷ்டிராவில் 19 வயது இளம் பெண்ணை மானபங்கம் செய்த பொறியியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாக்பூரை சேர்ந்தவர் சுதாகர் கராட்மாரே 58. கட்சிரோலியில் நீர்ப் பாசனத் துறை துணை பொறியியலாளராக பணியாற்றும் இவர் அங்கிருந்து நாக்பூரில் உள்ள வீட்டிற்கு தினமும் சென்று வருவது வழக்கம்.

பயணத்தின் போது ஆசிரியர் பட்டயப் படிப்பு பயிலும் பிரனாலி போயர், 19 உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி ஒன்றாக பயணித்தனர்.

பயணத்தின் போது சுதாகர், பிரனாலியிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்துள்ளார். தன்னை மானபங்கம் செய்ததால் பிரனாலி எரிச்சல் அடைந்தார்.

சுதாகரின் வீட்டிற்கு சென்ற பிரனாலி, அவரை பல முறை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

சுதாகரின் கையடக்க தொலைபேசியில் பிரனாலியின் எண்கள் பதிவாகியிருந்ததால் பொலிஸார், பிரனாலியிடம் விசாரணை நடத்தினர்.

பிரனாலி குற்றத்தை ஒப்புக் கொண்டதால் பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றில் ஒப்படைத்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template