Headlines News :
Home » » 17 குழந்தைகளை கற்பழித்த எகிப்து நாட்டு காமுகன் நேற்று பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டான்!

17 குழந்தைகளை கற்பழித்த எகிப்து நாட்டு காமுகன் நேற்று பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டான்!

Written By TamilDiscovery on Wednesday, June 19, 2013 | 12:25 PM

குவைத்: குவைத்தில் 17 குழந்தைகளை கற்பழித்த எகிப்து நாட்டு காமுகன் நேற்று பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டான்.

எகிப்தைச் சேர்ந்தவர் ஹஜாஜ் சாதி(33). அவர் குவைத் சிட்டி அருகில் உள்ள ஹவால்லி என்ற இடத்தில் தங்கி இருந்தார். அந்த பகுதியில் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். ஹஜாஜ் 17 சிறுவர், சிறுமிகளை கடத்தி கற்பழித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் அவர் போலீஸ் கையில் சிக்காமல் எகிப்து செல்ல முடிவு செய்தார். ஆனால் போலீசார் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் கடந்த 2007ம் ஆண்டு நடந்தது. இந்த கற்பழிப்பு சம்பவங்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 5 மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து நேற்று பொதுமக்கள் முன்னிலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். தனக்கு எகிப்து அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று அவர் தூக்கிலிடப்படும் முன்பு குற்றம் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template