Headlines News :
Home » » 15 கிலோ கஞ்சாவுடன் கடற்படையினரால் நபரொருவர் கைது!

15 கிலோ கஞ்சாவுடன் கடற்படையினரால் நபரொருவர் கைது!

Written By TamilDiscovery on Sunday, October 13, 2013 | 11:11 PM

இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கடத்தி வந்த ஒருவர் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - வெற்றிலைக்கேணி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெற்றிலைக்கேணி கடற்படையினரால் குறித்த நபர் நேற்று (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 15 கிலோ 346 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் உடுத்துறை வடக்கு - தாழையடி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கஞ்சாவுடன் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸார் அவரை இன்று (14) பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template