Headlines News :
Home » » தொடர்ந்தும் இறக்குமதி செயயப்படும் தரங்குறைந்த பெட்ரோல்!

தொடர்ந்தும் இறக்குமதி செயயப்படும் தரங்குறைந்த பெட்ரோல்!

Written By TamilDiscovery on Wednesday, October 2, 2013 | 7:46 PM

சிங்கப்பூரிலிருந்து தரம் குறைந்த எரிபொருள் ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல் சிங்கப்பூரின் பெரோ சய்னா நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

இதில் 90 ஒக்ரேன் ரக பெற்றோல் 30,000 தொன் மற்றும் 95 ஒக்ரேன் ரகத்தைச் சேர்ந்த 5000 தொன் பெற்றோல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை லங்கா ஓட்டோ டீசல் 5,000 தொன்னும் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இற்குமதி செய்யப்பட்ட இரு ரக பெற்றோல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது இற்குமதி செய்யப்பட்டுள்ள பெற்றோல்களில் ஒக்டேல் அளவு உரிய வகையில் இல்லை என இரு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கனிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ் பெற்றோல்களுக்கு பதிலாக சிறந்த பெற்றோலை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template