Headlines News :
Home » » அசாராம் பாபு பெண்களை எவ்வாறு தெரிவு செய்வார்?

அசாராம் பாபு பெண்களை எவ்வாறு தெரிவு செய்வார்?

Written By TamilDiscovery on Saturday, September 21, 2013 | 10:25 AM

மத குருவான ஆசாராம் பாபு பெண்களை எப்படி தேர்வு செய்வார் என்று அவரின் முன்னாள் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

அசாராம் பாபு தனது ஆசிரமத்தில் தங்கிப் படித்த 16 வயது சிறுமியிடம் தவறாக நடந்ததால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆசாராம் பாபு பற்றி அவரின் முன்னாள் உதவியாளர் மகேந்திர சாவ்லா பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார்.

சாவ்லா கடந்த 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஆசாராமின் உதவியாளராக இருந்துள்ளார்.

சாவ்லா வெளியிட்டுள்ள தகவலில், 74 வயதாகும் ஆசாராம் பாபு போதைப் பொருளுக்கு அடிமையாம். அவரால் ஓபியம் சாப்பிடாமல் இருக்க முடியாதாம். வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தான் அவருக்கு ஓபியம் சப்ளை செய்து வந்துள்ளார்.

ஆசாராம் பாபுவின் மகன் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வருகிறார். ஆனால் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாக சாவ்லா தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு பிடித்த பெண் மீது ஆசாராம் பாபு பழம் அல்லது பிரசாதத்தை வீசுவாராம். அல்லது அந்த பெண் மீது டார்ச் லைட்டை அடிப்பாராம். இப்படி தான் அவருக்கு பிடித்த பெண்களை அவர் தேர்வு செய்துள்ளார்.

ஆசாராம் பாபுவின் உடல் நலனை பெண் மருத்துவர் தான் கவனிக்க வேண்டுமாம் என்று திடுக்கிடுத் தகவல்களை தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template