Headlines News :
Home » » 5 லட்ச ரூபா கொள்ளை: துணிந்து போராடி பணத்தை மீட்ட பெண்!

5 லட்ச ரூபா கொள்ளை: துணிந்து போராடி பணத்தை மீட்ட பெண்!

Written By TamilDiscovery on Wednesday, September 25, 2013 | 8:40 PM

மோதரை பொலிஸ் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தனியார் வங்கியில் வைப்பிலிடவென பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் ஐந்து இலட்சம் ரூபாவை எடுத்து வந்துள்ளார்.

வங்கிக்கு அருகில் குறித்த பெண் வந்து இறங்கியபோது அங்குவந்த இனந்தெரியாத மூவர் ஆயுதத்தை காட்டி பெண்ணிடம் இருந்து பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண்ணும் முச்சக்கரவண்டி சாரதியும் துணிவுடன் கொள்ளையர்களை விரட்டிச் சென்று அவர்களை மடக்கிப்பிடித்து பணப்பையை மீள பறித்துள்ளனர்.

அதன்போது கொள்ளையர் ஒருவர் முச்சக்கரவண்டி சாரதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். துரதிஸ்டவசமாக அந்த துப்பாக்கிச்சூடு கொள்ளையர் குழுவில் இருந்த ஒருவர் மீது பட்டுள்ளது.

ஏனைய இரு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை கைது செய்ய மோதரை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template