Headlines News :
Home » » 20 வயது இளைஞனைக் கடத்தி வன்புணர்ச்சி: 19 வயது நான்கு இளைஞர்கள் கைது!

20 வயது இளைஞனைக் கடத்தி வன்புணர்ச்சி: 19 வயது நான்கு இளைஞர்கள் கைது!

Written By TamilDiscovery on Saturday, August 3, 2013 | 11:08 AM

காலி அஹங்கம சுற்றுலா விடுதியொன்றில் சேவையாற்றி வரும் 20 வயதான இளைஞனைக் கடத்தி சென்று பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி, அவரிடம் இருந்து 6 ஆயிரம் ரூபா பணத்தையும் செல்லிட பேசியையும் இளைஞர்கள் கொள்ளையிட்டுள்ளனர். 19 வயதுடைய  நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 வயதான இளைஞன் இரவு பணி முடிந்து, சுற்றுலா விடுதிக்கு அருகில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸூக்காக காத்திருந்த போது, அங்கு சென்ற இந்த இளைஞர்கள் கத்தியை காண்பித்து மிரட்டி அவரை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அஹங்கம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தாம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template