Headlines News :
Home » » பாதுகாப்பு ஊழியர்கள் மேல் சிறுநீர் கழித்த கிரிக்கெட் வீரர்: பகிரங்க மன்னிப்பு!

பாதுகாப்பு ஊழியர்கள் மேல் சிறுநீர் கழித்த கிரிக்கெட் வீரர்: பகிரங்க மன்னிப்பு!

Written By TamilDiscovery on Thursday, August 8, 2013 | 8:51 AM

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் வினோதமான சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

31 வயதான பனேசர், கடந்த திங்கட்கிழமை பிரைட்டான் கடற்கரை ஓரம் அமைந்துள்ள இரவு விடுதிக்கு சென்றார்.

அங்கு ஆசை தீர மது அருந்தினார். போதை தலைக்கேறிய நிலையில், அவர் அங்கு வந்த சில பெண்களிடம் தொல்லை கொடுக்கும் வகையில் நடந்து கொண்டார்.

இதனால் அவரை இரவு விடுதியை விட்டு வெளியேற்றும்படி அந்த பெண்கள், விடுதியின் பாதுகாப்பு ஊழியர்களிடம் புகார் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பனேசர், கிளப்பில் மேல்பகுதிக்கு சென்று அங்கிருந்து பாதுகாப்பு ஊழியர்களை நோக்கி சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தினார். இதையடுத்து அந்த ஊழியர்கள் அவரை பிடித்து சென்று பொலிஸாரிம் ஒப்படைத்தனர். குடித்துவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாகவும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சம்பவத்திற்கு பனேசர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

பனேசர், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template