Headlines News :
Home » » பெண்களுக்கு திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய காதல் மன்னன் கைது!

பெண்களுக்கு திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய காதல் மன்னன் கைது!

Written By TamilDiscovery on Sunday, August 4, 2013 | 3:59 AM

பேலியத்த பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் வெயங்கொட, அளுத்கம, எம்பிலிப்பிட்டிய, அம்பலாங்கொட, பதுளை, பொரளை ஆகிய பிரதேசங்களில் பெண்களை திருமணம் செய்வதாக, ஏமாற்றி அவர்களது பணம் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்துள்ள பல சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல், கண்டி, மாவனல்ல, கம்பஹா மாவட்ட நீதிமன்றங்களினால் இந்நபர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேலியத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று (03) தங்கல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை (05) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template