Headlines News :
Home » » பாசத்துக்காக தம்பியை கொல்ல முயன்ற நடிகை: கேரளத்து அழகி கூறும் அதிர்ச்சித் தகவல்!

பாசத்துக்காக தம்பியை கொல்ல முயன்ற நடிகை: கேரளத்து அழகி கூறும் அதிர்ச்சித் தகவல்!

Written By TamilDiscovery on Thursday, July 25, 2013 | 3:08 AM

சிறு வயதில் தனது தம்பியை கொலை செய்ய முயன்றதாக நடிகை நவ்யா நாயர் தான் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

ராதா மோகனின் அழகிய தீயே படம் மூலம் தமிழில் அறிமுகமான கேரளத்து அழகி நவ்யா நாயர். அவர் மாயக் கண்ணாடி, ராமன் தேடி சீதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயான அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு புத்தகத்தை வெளியிடவிருக்கிறார்.

நவ்யா ரசங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் அவர் அதிர்ச்சி அளிக்கும் ஒரு சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார். சிறு வயதில் பெற்றோரின் அன்பை பெற பிள்ளைகள் போட்டி போடுவது சகஜம். அப்படி தான் நவ்யாயும் தனது பெற்றோரின் அன்பை பெற தன்னுடைய தம்பியுடன் போட்டி போட்டுள்ளார்.

அந்த போட்டியால் தம்பி மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை கீழே தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த விஷயம் அவரது பெற்றோருக்கே இதுவரை தெரியாமல் இருந்ததாம்.
Share this article :

1 comment:

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template