பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸில் வைத்து டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட்டின் வாகனத்தொடரணி மீது பாய்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரை நிர்வாணப் பெண்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது சக பெண் ஆர்வலர்களை விடுதலை செய்யும் படி வலியுறுத்தி உக்ரேன் நாட்டு பெண்கள் இயக்கமான 'பெமென்' இயக்க உறுப்பினர்களே இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட் அங்கிருந்து திரும்பும் போதே அவரது வாகனத் தொடரணி மீது இரண்டு பெண்கள் பாய்ந்துள்ளனர்.
இவர்கள் மேலாடையின்றி இருந்ததுடன், அண்மையில் கைதுசெய்யப்பட்ட பெண் ஆர்வலர்களை விடுதலை செய்யும் படி வாசகங்களை உடலில் எழுதியிருந்தனர். வாகனத்தொடரணி மீது பாய்ந்த இவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து இழுத்து உடனடியாக அவ்விடத்தை விட்டு அகற்றியுள்ளனர்.
உலகின் கவனத்தினை இலகுவாக ஈர்க்கும் பொருட்டு 'பெமென்' இயக்கத்தினர் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டுனீசிய நாட்டு பிரதமர் வாகனத்தொடரணி மீது பாய்ந்து பெண்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்!
Written By TamilDiscovery on Tuesday, June 25, 2013 | 11:35 PM
Related articles
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்!
- இந்தியப் பிரதமர் மன்மோகனிடம் தோற்ற அமெரிக்க.
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
- பொருளாதாரம் முடங்கும் நிலை: ஒபாமா எச்சரிக்கை!
- கதிர்வீச்சு கலந்த நீர் சமுத்திரத்தை சென்றடைந்திருக்கலாம் - டோக்கியோ மின்சக்தி நிறுவனம்!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !