Headlines News :
Home » » மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து: 8 பேர் பலி்!

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து: 8 பேர் பலி்!

Written By TamilDiscovery on Tuesday, June 25, 2013 | 11:14 AM

ஹரித்வார்: உத்தர்காண்ட் பெருவெள்ளதில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகி உள்ளனர்.

உத்தர்காண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு செல்லும் வழியில் உள்ளது கெளிரிகுண்ட். அப்பகுதியில் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் ஈடுபட்டிருக்கின்றன. சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பெரும் போராட்டத்துடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றான எம்.ஐ.17 V5 இன்று விபத்துக்குள்ளானது.

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்டுக் கொண்டு் கேதார்நாத்தில் இருந்து கெளரிகுண்ட் திரும்பிய போது இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதில் விமானப் படையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் மற்றும் 3 பயணிகள் என 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template