Headlines News :
Home » » பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!

பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!

Written By TamilDiscovery on Saturday, October 26, 2013 | 11:04 AM

மாணவர்கள் பலரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் றக்குவானை, கந்தப்பொல பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (26) நண்பகல் 12 மணியளவில் சந்தேகநபரான பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியல் துஸ்பிரயோகம் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை றக்குவானை பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அதிபர் நாளை (27) பல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template