Headlines News :
Home » » காதல் யோடிக்கு நேர்ந்த கொடூரத் தண்டனை: மனிதர்களின் மிருகத்தனமான செயல்!

காதல் யோடிக்கு நேர்ந்த கொடூரத் தண்டனை: மனிதர்களின் மிருகத்தனமான செயல்!

Written By TamilDiscovery on Wednesday, October 16, 2013 | 8:35 AM

இந்திய மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த ஒரு ஜோடியை, கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து பல்வேறு சித்திரவதைகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.

எனினும் இதுவரை பொலிஸார் யாரையும் கைது செய்யவில்லை. எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காதல் ஜோடியின் உடைகளை கிழித்து அவர்கள் உடலில் கறுப்பு பெயிண்ட் அடித்து ஊர்மக்கள் திரண்டு அவர்கள் அடித்து உதைத்த வண்ணம் 3 கிராமங்களில் வளைய வந்துள்ளனர்.

அத்துடன் அவர்களது உடலின் மர்மஸ்தான பகுதியில் மலம் உள்ளிட்ட அசிங்கங்களை கட்டித் தொங்க விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்கும் கோகாரியா, பல்வாரி, படிபுரா கிராமம் முழுதும் இவர்களை தர்ம அடி கொடுத்து கூட்டிவந்துள்ளனர்.

மேலும் காதல் கணவன் கையில் ஒரு டிரம் ஒன்றைக் கொடுத்து அடித்து வரவும் செய்துள்ளனர்.

சுமார் 2 மணி நேரம் இவர்களை இவ்வாறு கிராம மக்கள் சித்ரவதை செய்துள்ளனர். குறிப்பாக பெண்கள் மிகவும் உற்சாகமாக இதில் பங்கேற்றமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவமானமும் சித்ரவதையும் முடிந்த பிறகு காதல் கணவன் பொலிசில் புகார் செய்ததாக தெரிகிறது. ஆனால் கிராம மக்கள் பொலிசையே மிரட்டியுள்ளனர். புகாரை எடுக்கவேண்டாம் என்று.

பிறகு பொலிசிலா புகார் கொடுக்கிறாய் என்று இரவு மீண்டும் அடி உதை கொடுக்கப்பட்டது காதலர்களுக்கு.

இது சாதிய கலப்புத் திருமணமா, அல்லது பெண் தலித்தா, ஆண் தலித்தா போன்ற தகவல்கள் தெரியவரவில்லை.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template