Headlines News :
Home » » ஆசிரியருடனான உறவில் கர்ப்பமான மாணவி!

ஆசிரியருடனான உறவில் கர்ப்பமான மாணவி!

Written By TamilDiscovery on Tuesday, September 24, 2013 | 9:16 PM

நுவரெலியா - கந்தபளை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஆசிரியரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணியாகியுள்ள சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்தபளை நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பாடசலையொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபவத்தில் 15 வயது மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அண்மைக்காலமாக பாடசாலைக்கு வருகை தராத நிலையில், அவர் மூன்று மாதக் கர்ப்பிணியாகா இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கந்தபளை பொலிஸ் நிலையத்தில் பாடசாலையில் பழைய மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவி பாடசாலைக்கு வருகைதருவதை நிறுத்திக்கொண்டுள்ளார். இதன் பின்னர் மாணவி கர்ப்பமாக்கப்பட்டுள்ளமை தெரிய வரவே குறித்த பாடசாலையின் பழைய மாணவர்கள் நேற்று பாடசாலை வளாகத்துக்குள் சென்று சந்தேக நபரான குறித்த ஆசிரியரை பாடசாலையை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறான ஒழுக்கமற்ற ஆசிரியரை தொடர்ந்து ஆசிரியப் பணியில் பாடசாலை நிர்வாகம் அனுமதிக்கும் பட்டசத்தில் அது ஏனைய மாணவிகளுக்கும் பாதிப்புக்களை ஏற்ப்படுத்தக்ககூடியதாக அமைந்து விடும் என்பதால் அவரை பாடசாலையிலிருந்து வெளியேற்றுமாறு கோரினர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமயத்தில் பாடசாலையில் பணியிலிருந்த குறித்த ஆசிரியர் அரை நாள் விடுமுறையில் செல்வதர்ர்க்கு முயற்சித்துள்ளார். எனினும் தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

கந்தபளை பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு வினவியபோது, விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் குறித்த பாடசாலை ஆசிரியரிடம் தொலைபேசி ஊடாக வினவியபோது அதிபர் பதில் அளிக்காது தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவியை திருமணம் முடிப்பதாக கூறியுள்ளதாகவும் மாணவியின் வீட்டில் அவர் இது குறித்து கதைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மாணவி இன்றும் சிறுமியாக இருப்பதோடு ஆசிரியருக்கு 25 வயதிற்கும் மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template