Headlines News :
Home » » தமிழ்நாட்டு பெண்ணை காதலித்து மணந்த ஜேர்மன் தொழிலதிபர்!

தமிழ்நாட்டு பெண்ணை காதலித்து மணந்த ஜேர்மன் தொழிலதிபர்!

Written By TamilDiscovery on Saturday, September 7, 2013 | 7:15 AM

இரண்டு ஆண்டுகளாக காதலித்து தமிழ்நாட்டுப் பெண்ணை கரம்பிடித்துள்ளார் ஜேர்மன் நாட்டு தொழிலதிபர்.

கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் வினோதினி(21). செவிலியரான இவரது சித்தி திலகா கடலூர் ஆத்தி ராயன் குப்பத்தில் வசித்து வருகிறார்.

அந்த வீட்டின் மாடியில் ஜெர்மனியை சேர்ந்த தொழிலதிபர் கோப்லான் (34) வாடகைக்கு வசித்து வருகிறார்.

இசை கலைஞரான இவர், புதுவை நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

வினோதினி தனது சித்தி திலகா வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அவரது அழகில் கோப்லான் மயங்கி காதல் வயப்பட்டார்.

வினோதினியை நேரில் சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். வினோதினியும், தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் வினோதினியின் குடும்பத்தினரிடம் கோப்லான் தனது காதல் விவகாரத்தை கூறியுள்ளார்.

மேலும் வினோதினியை திருமணம் செய்ய அனுமதி அளிக்க வேண்டினார் அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் கோப்லான்–வினோதினி திருமணம் நடந்தது.

பட்டு வேட்டி–சட்டை அணிந்து இந்து முறைப்படி வினோதினிக்கு கோப்லான் தாலி கட்டினார். மணக்கள் மாலை மாற்றி கொண்டனர்.

பின்னர் இந்த காதல் ஜோடி உறவினர்களுடன் காரில் கடலூர் சென்றனர்.

திருமண நிகழ்ச்சியில் வினோதினியின் உறவினர்கள் மட்டுமின்றி, ஜெர்மனியில் இருந்து வந்த கோப்லானின் உறவினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template