Headlines News :
Home » » குழந்தை இல்ல ஏக்கத்தில் மாஜி எம்.ஜி.ஆர் தற்கொலை!

குழந்தை இல்ல ஏக்கத்தில் மாஜி எம்.ஜி.ஆர் தற்கொலை!

Written By TamilDiscovery on Monday, September 16, 2013 | 8:30 PM

குழந்தை இல்லாத முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடன் அவரது மனைவியும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தை இல்லாத கவலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டைச் சேர்ந்தவர் மூர்த்தி, 60 வயதான மூர்த்தி நல்ல நிறத்தில் இருப்பவர். இதனால் எம்.ஜி.ஆர். வேடம் போட்டு கட்சிக் கூட்டங்கள், ஊர்வலங்கள், நிகழ்ச்சிகளுக்குப போவார். அச்சகம் ஒன்றிலும் பணியாளராக இருந்து வந்தார்.

இவரது மனைவி பெயர் உஷா ராணி. இவருக்கு 55 வயதாகிறது. இவர்கள் இருவரும் குழந்தை இல்லாத ஏக்கத்திலேயே இத்தனை காலத்தையும் ஓட்டி வந்துள்ளனர். சில நாட்களாக இருவரின் நடமாட்டமும் இல்லை. வீடும் பூட்டிக் கிடந்தது.

இதனால் வெளியூர் போயிருப்பார்கள் என்று அக்கம் பக்கத்தினர் நினைத்தனர். ஆனால் வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையி்ல அழுகிய நிலையில் பிணமாக காணப்பட்டனர்.

தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. குழந்தை இல்லாத ஏக்கமா அல்லது கடன் தொல்லையா என்று தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகினறனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template