Headlines News :
Home » » கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்திற்கு எதிராக மனுத் தாக்கல்!

கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்திற்கு எதிராக மனுத் தாக்கல்!

Written By TamilDiscovery on Monday, September 16, 2013 | 8:06 PM

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தாக்கல் செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 157/7 ஏ (4) என்ற பிரிவின் கீழ் குறித்த விஞ்ஞாபனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ நாட்டை பிரிவினைக்குட்படுத்தும் விடயங்களை முன்வைக்கக் கூடாது. இதனடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டத்தை மீறியுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template