Headlines News :
Home » » காதலிக்கு தூக்கு, காதலன் தலை துண்டித்து கொலை: அதிரும் கொடூரத் தண்டனை!

காதலிக்கு தூக்கு, காதலன் தலை துண்டித்து கொலை: அதிரும் கொடூரத் தண்டனை!

Written By TamilDiscovery on Thursday, September 19, 2013 | 10:32 PM

ஹரியானாவில் காதலர்களை பெண்ணின் குடும்பத்தார் கௌரவக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டம் கலனவுரில் உள்ள கர்னாவதி
கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்மேந்தர்(23), நிதி(20). காதலர்களான அவர்கள் ரோதக்கில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து அவர்களை காணவில்லை. அவர்கள் ஊரை விட்டு சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பேச்சு அடிபட்டது. அவர்களின் உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நிதியின் குடும்பத்தார் நேற்று காலை அவரை தொடர்பு கொண்டு ஊருக்கு திரும்பி வருமாறு பேசியுள்ளனர். திரும்பி வந்தால் தர்மேந்தரை தாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று வாக்குறுதியும் அளித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் நேற்று ஊருக்கு திரும்பி நிதி வீட்டுக்குச் சென்றனர். உடனே நிதியை அவரது குடும்பத்தார் தூக்கில் தொங்க விட்டு பிணமாக்கி அவரின் உடலை சத்தமில்லாமல் எரித்துவிட்டனர்.

பின்னர் தர்மேந்தரை ஊரார் முன்னிலையில் அடித்து கை, கால்களை ஒடித்து பின்னர் தலையை வெட்டிக் கொன்றனர். அவரது உடலை அவரின் வீட்டுக்கு வெளியே வீசினர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கப் பஞ்சாயத்துபடி ஒரே கிராமத்தைச் சேர்ந்த, சமூகத்தைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template