Headlines News :
Home » » மகன் கண்ணெதிரே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கண்டக்டர் கைது!

மகன் கண்ணெதிரே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கண்டக்டர் கைது!

Written By TamilDiscovery on Thursday, August 1, 2013 | 8:36 AM

உத்திர பிரதேசம் பேருந்து நிலையத்தில் வைத்து மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசம் பாலியா கிராமத்தைச் சேர்ந்த மோடில்லாஹ் கான் (வயது 35), இவரது மனைவி ரூபி, இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

மதுவுக்கு அடிமையான கானால், அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட்டு வருவதால் மனமுடைந்த ரூபி, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். கான் கண்டக்டராகவும், அவரது மனைவி ரூபி தனியார் மருத்துவமனையில் உதவியாளராகவும் பணி புரிந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று, கைத்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உன்னை சந்திக்க விரும்புவதாக கூறியதை நம்பி ரூபி காய்காட் பேருந்து நிலையத்திற்கு தனது மகனோடு வந்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த கான், பேருந்து நிலையத்தில் வைத்து ரூபியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

மகன் கண்ணெதிரே மனைவியைக் கொன்ற குற்றவாளியைப் பிடிப்பதற்காக இரு தனிப்படைகள் அமைத்து தேடப்பட்ட போது, அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் கான் கைது செய்யப்பட்டார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template