சவுதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து வைத்து சித்திரவை செய்யப்பட்டதாக வெளியான செய்தியை சவுதி அரேபிய தூதரகம் மறுத்துள்ளது.
அது தவறான செய்தி என சவுதி அரேபிய தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் 'அராப் செய்தி' சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கை பணிப்பெண்ணுக்கு அழைப்பாணை விடுத்து விசாரித்ததாகவும் அவரது உடம்பில் எரிகாயங்கள் சில காணப்பட்டதே தவிர உடல் நிலை சிறப்பாக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.
நிலங்கெதரகே தயாரத்ன என்ற பணிப்பெண் இலங்கையில் உள்ள தனது கணவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து தனது வீட்டு உரிமையாளர் தன்னை குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து கொலை செய்யும் நோக்கில் சித்திரவதை செய்வதாக கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
குறித்த இலங்கை பணிப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரது உடல் நல்ல நிலையில் உள்ளதை வைத்தியர்கள் உறுதி செய்ததோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அன்றைய தினமே அவர் வீடு திரும்பியுள்ளதாக தூதரக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவரது உடலில் ஏற்ப்பட்ட தீக்காயங்கள் பற்றியோ, அல்லது அவை எவ்வாறு ஏற்ப்பட்டன என்பது பற்றியோ எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை!
குளிரூட்டிக்குள் அடைக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண்!
இலங்கை பெண் குளிரூட்டிக்குள் அடைத்து சித்திரவதை: அரேபிய தூதரகம் மறுக்கின்றது!
Written By TamilDiscovery on Thursday, August 29, 2013 | 1:43 AM
Related articles
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
- பொருளாதாரம் முடங்கும் நிலை: ஒபாமா எச்சரிக்கை!
- கதிர்வீச்சு கலந்த நீர் சமுத்திரத்தை சென்றடைந்திருக்கலாம் - டோக்கியோ மின்சக்தி நிறுவனம்!
- வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றம்!
- நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா!
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !