Headlines News :
Home » » பெற்றோரால் அனாதராவாக விட்டுச்செல்லப்பட்ட மூன்று சிறுமிகள் மீட்ப்பு!

பெற்றோரால் அனாதராவாக விட்டுச்செல்லப்பட்ட மூன்று சிறுமிகள் மீட்ப்பு!

Written By TamilDiscovery on Friday, July 19, 2013 | 7:52 AM

பொவந்தலாவை, போரா கீழ்ப் பிரிவு தோட்டத்தில் உள்ள வீடொன்றிலிருந்து அநாதரவாக விடப்பட்ட நிலையில் மூன்று சிறுமிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

9, 7 மற்றும் 5 வயதுகளைக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளே நேற்று (18) மாலை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் தந்தை கொழும்பில் வேலை செய்து வருபவர் எனவும் அவர் கடந்த ஆறு மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாயார் சிறுமிகளை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

சிறுமிகள் மூவரும் இன்று (19) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது சிறுமிகளை மஸ்கெலியா சிறிவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template